தொழிலாளர் நலத்துறை கண்காணிப்புக்குழு ஆய்வு


தொழிலாளர் நலத்துறை கண்காணிப்புக்குழு ஆய்வு
x

தொழிலாளர் நலத்துறை கண்காணிப்புக்குழு ஆய்வு நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் வீரராக்கியம் மற்றும் திருக்காம்புலியூர் பகுதிகளில் உள்ள 3 செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டத்தின் கீழ் நேற்று சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கொத்தடிமை தொழிலாளர் முறையில் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது அறியப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க 1800 4252 650 என்ற எண்ணிலோ அல்லது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ் 33 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எடைகள் மற்றும் அளவைகள் தயாரிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பழுதுபார்ப்பவர் நிறுவனங்களில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகளும், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் 2 முரண்பாடுகளும், சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில் 3 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதுபோன்று தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story