சர்வதேச மகளிர் தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சர்வதேச மகளிர் தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். மகளிருக்காக திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், ஆட்சிக்காலத்தில் தி.மு.க. செயல்படுத்திய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த 21-ந்தேதி தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ தி.மு.க. அரசுவெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோட்பாடுகளை இலக்காக வைத்து செயல்பட அரசு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாக பெறும் வரை, அதை நோக்கிய பயணம் தொடரும் என்று உறுதி அளித்துள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.




Next Story