ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரம்
x

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்ேடா-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

உண்ணாவிரதம்

கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதனை மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளருமான சங்கர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணியன், வேலுமணி, பெரியசாமி, ஆரோக்கிய பிரேம்குமார், சுப்பிரமணியன், சக்திவேல் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத நிலுவை தொகை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்ததாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story