மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர் காமராஜர் : பிரதமர் மோடி


மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர் காமராஜர் : பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 July 2022 6:05 AM GMT (Updated: 15 July 2022 6:06 AM GMT)

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.என தெரிவித்துள்ளார்.


Next Story