தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து கரூர் மாணவர்கள் சாதனை


தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து கரூர் மாணவர்கள் சாதனை
x

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர்

திருப்பூர் மாவட்டம், சிக்கண்ணா காலேஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 23-ந்தேதி கியோகுஷின் ரியு அமைப்பின் சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் தமிழக அணியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வீரர்கள் சென்சாய் எம்.தமிழ்ச்செல்வன் தலைமையில் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் 50-60 கிலோ எடை பிரிவில் பாலச்சந்திரன், நாகரத்தினம், சத்யன், சங்கர் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கட்டா பிரிவில் 21 பரிசுகளும், குமித்தே (சண்டை) பிரிவில் 16 பரிசுகளும் வென்று சாதனை படைத்தனர். சிறப்பு விருந்தினராக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கியோகுஷின் ரியு அமைப்பின் உலகளாவிய இயக்குனர் சீகான் ஸ்டீவன் ஃபூ கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விழாவில் பயிற்சியாளர் தமிழ்ச்செல்வனுக்கு கிளை தலைவருக்கான சான்றிதழ் மற்றும் நியமன கடிதம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சென்சாய் சாமிவேல், பயிற்சியாளர்கள் ராஜா, மணிகண்டன், பொன்னர், ராஜலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.


Next Story