தொழிலாளர் நலநிதியை விரைந்து செலுத்த வேண்டும்


தொழிலாளர் நலநிதியை விரைந்து செலுத்த வேண்டும்
x

தொழிலாளர் நலநிதியை விரைந்து செலுத்த வேண்டும் என நிறுவனங்களுக்கு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர்

தொழிலாளர் நல நிதிச்சட்டம் பிரிவு 2 (டி) படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலை தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40 என மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை விரைவாக வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

வசூலிக்க நடவடிக்கை

வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். இந்த தொழிலாளர் நல நிதியை செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டம் 28-ன்படி வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி தொகையை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற முகவரிக்கு 'The Secretary, Tamil Nadu Labour Welfare Board. Chennai- 600 006' என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story