கூலி தொழிலாளி மர்ம சாவு


கூலி தொழிலாளி மர்ம சாவு
x

சிதம்பரத்தில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் லால்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ஜெயராஜ் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜ் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story