லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x

லாரி மோதி தொழிலாளி சாவு

ஈரோடு

சத்தியமங்கலம்

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று சத்தியமங்கலம்- கோவை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மேட்டூர் காலனி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story