விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்


விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்
x

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

குடிசை பகுதியில் வெடிக்கக்கூடாது

எனவே பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே திறந்தவெளியில் ஒன்றுகூடி அரசு நிர்ணயித்த நேரங்களில் வெடிக்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடித்து விபத்தில்லா தீபாவளியாககொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story