வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம்


வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம்
x

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து துறை சிறப்பு முகாமில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து துறை சிறப்பு முகாமில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

சிறப்பு முகாம்

திருப்பத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்ட பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து துறை சிறப்பு முகாம் திருக்கோஷ்டியூர், காரையூர், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, வேலங்குடி, இ.அம்மாபட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.

முகாமில் சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தனபாலன் தலைமை தாங்கி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். திருப்பத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கலந்துகொண்டு துறை மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள், உழவர் கடன் அட்டை, மண் மாதிரி எடுத்தல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பட்டா மாறுதல்

மேலும் முகாமில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்களை விவசாயிகள் வழங்கினர். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப் பட்டது. வருவாய்த் துறையினர் சார்பில் பட்டா மாறுதலுக்கான ஆணை மற்றும் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டது. கால்நடை துறையினர் சார்பில் கால்நடை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

சிறப்பு முகாமில் திருக்கோஷ்டியூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி மதியழகன், வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் பாஞ்சாலி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் நல்லழகு, காரையூர் கிராம நிர்வாக அலுவலர் ஐரிஷ் அஸ்மி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராதா, கிருஷ்ணவேணி, ஷீலா பிரியா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story