விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குப்பைகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ெரயில்வே மேம்பாலத்தின் அருகில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் மழைநீரை 6 மாத காலமாகியும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேங்கி கிடக்கும் மழை நீரையும், குப்பைகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது துர்நாற்றம் வீசும் குப்பைகளையும், தேங்கி கிடக்கும் மழை நீரையும் உடனடியாக அகற்ற வில்லையென்றால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக்கையிடும் போராட்டம் நடைபெறும் என்றார். இதில் தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், நகர பொருளாளர் பாஸ்கர், கிருத்துவ பேரவை செயலாளர் அறிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story