விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் பஸ் நிலையம் அருகே தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story