வாலிபருக்கு ஆயுள் தண்டனை


வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

குழந்தை திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு போக்சோ சட்டத்தின் கீழும், கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் செய்ததற்கும் என 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை கடத்தி சென்றதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை குழந்தை திருமணம் செய்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி கணேசன் ஆயுள் தண்டனை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட கணேசனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story