மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2023 9:43 PM GMT (Updated: 19 Sep 2023 10:00 PM GMT)

வள்ளியூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மடப்புரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து, அவர் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது அதில் 6 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மடப்புரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (39) என்பதும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story