மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

போடியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி டாஸ்மாக் கடை அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர.் நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 49) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story