மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அஸ்தினாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமியின் மகன் ஆனந்தகுமார்(வயது 34) என்பவர் சிவன் கோவில் எதிர்புறத்தில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story