மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

உவரி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் இடையன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை ஆனைகுடி விலக்கில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, தளபதிசமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்த லிங்கத்துரை (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story