மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவில் வசிக்கும் பாண்டித்துரை (வயது 40) என்பவர், உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டித்துரையை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story