சீனாபுரம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு கால்நடைகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு கால்நடைகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

சீனாபுரம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

கிடாரி கன்று ரூ.43 ஆயிரம்

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் நேற்று வழக்கம்போல் கால்நடை சந்தை கூடியது.

இதற்கு விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 120-ம், சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 110-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 150-ம் சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மோர்ப்பாளையம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

ரூ.1¼ கோடிக்கு விற்பனை

கடந்த வாரத்தை விட இந்த வாரம் கறவை மாடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரையிலும், கிடாரி கன்று ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரையிலும் விலை அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 25 லட்சம் வரை நடந்ததாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த கால்நடைகளை கோபி, திங்களூர், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், நசியனூர், பெருந்துறை, வெள்ளோடு, அறச்சலூர், அவல்பூந்துறை, சென்னிமலை, திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, குன்னத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து சந்தைக்கு வந்திருந்த விவசாயிகளும், மாட்டு வியாபாரிகளும் விலைபேசி பிடித்து சென்றனர்.


Next Story