கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 16 April 2023 7:00 PM GMT (Updated: 16 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

மாரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் அதிகாரிகள் சாமனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 5 யூனிட் கற்கள் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story