ஆப்பக்கூடல் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர் உட்பட 3 பேர்...!


ஆப்பக்கூடல் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர் உட்பட 3 பேர்...!
x

ஆப்பக்கூடல் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஏரிக்குள் பாய்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

ஆப்பக்கூடல்,

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தாரமங்கலம்-பண்ணாரிக்கு செங்கல் ஏற்றி வந்த லாரி ஆப்பக்கூடல் அருகே கூத்தம்பூண்டி ஏரியில் விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுனர் சுப்பிரமணி மட்டும் ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரி கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

ஆனால் ஏரியில் லாரிக்குள் சிக்கி இருந்த சூலைத் தொழிலாளர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. பின்னர், அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் படகோட்டியின் உதவியுடன் எரிக்குள் இறங்கி சூலைத் தொழிலாளர்களான மணி மற்றும் ஜானகி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story