சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்


சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்
x

சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கல் மற்றும் மணல்கள் எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.

இந்த லாரிகள் கொம்பன்குளம் குடியிருப்பு மற்றும் பள்ளிகள் பகுதியில் அதி வேகமாக சென்று வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அப்பகுதி கல்குவாரிக்கு செல்ல லாரி ஒன்று அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த லாரி கொம்பன்குளம் வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது கிராமமக்கள் யாரும் அப்பகுதியில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

லாரி டிரைவர் காயமின்றி அதிர்ஷ்வசமாக தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story