காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 25). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கணவரை அச்சுறுத்துவதற்காக கஸ்தூரி விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். இருந்த போதிலும் பூச்சி மருந்து குடித்ததால் ஏற்பட்ட நுரையீரல் கோளாறால் தொடர்ந்து மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது கஸ்தூரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story