திருமணமான 9 மாதத்தில் மதுரை போலீஸ்காரர் தற்கொலை


திருமணமான 9 மாதத்தில் மதுரை போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2023 7:45 PM GMT (Updated: 19 Aug 2023 7:45 PM GMT)

திருமணமான 9 மாதத்தில் மதுரை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லி நகரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் ராஜ்பிரபாகரன் (வயது 26).

மதுரை ஆயுதப்படை 6-வது பட்டாலியன் போலீசாக வேலை பார்த்து வந்தார். மேலும் அங்குள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜ் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் ராஜ் பிரபாகரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் 2017-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று அவர் போலீஸ்காரராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராஜ் பிரபாகரனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதில் மன வருத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.


Next Story