மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழா நிறைவு
மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழா நிறைவு பெற்றது.
கரூர்
புகழூர் நகராட்சி காலனியில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு மற்றும் கிடா வெட்டு பூஜை நடந்தது. இதையடுத்து திருவிழா நிறைவு நாளான நேற்று மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொன்னியம்மாள், கன்னிமார்சாமி, விநாயகப்பெருமான் ஆகிய சுவாமிகளுக்க பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story