மகாலிங்க சித்தர் குருபூஜை விழா


மகாலிங்க சித்தர் குருபூஜை விழா
x

எளம்பலூர் சமத்துவபுரம் அருகே மகாலிங்க சித்தர் குருபூஜை விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் சமத்துவபுரம் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள மகாலிங்கம் சித்தர் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் (சமாதி) குருபூஜை விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி உலக மக்கள் நலன் கருதி ரோகிணி மாதாஜி தலைமையில் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் முன்னிலையில் திருச்சி தெய்வசிகாமணி சிவாச்சாரியார் குழுவினர் கோமாதா பூஜை மற்றும் ருத்ர ஜெப ஹோமத்தை நடத்தி வைத்தனர். அதன்பின்னர் 210 மகா சித்தர்கள் யாகமும் நடந்தது. விழாவில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் நிறுவனத்தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் விவேகானந்தன், சென்னை தொழில் அதிபர் வெற்றிமாறன், அருட்பிரகாச வள்ளலாரின் தன்னார்வலர் கருங்குழி கிஷோர்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story