பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர ரெயில் ரத்து


பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர ரெயில் ரத்து
x

தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில்நிலையத்தில் பராமரிப்பு பணியின் காரணமாக இரவு 12.25 முதல் 2.25 வரை 2 மணி நேரத்திற்கு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை நாளை (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story