ஆண் பிணம்


ஆண் பிணம்
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:46 PM GMT)

தென்காசி பஸ் நிலையம் அருகில் ஆண் பிணம் கிடந்தது.

தென்காசி

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆண் பிணம் கிடந்தது. அவருக்கு 45 முதல் 50 வயது இருக்கும். தகவல் அறிந்த தென்காசி போலீசார் அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது வலது கையில் எஸ்.செங்கான் என்று தமிழ் எழுத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் அதே கையில் சிவசிவ அரோகரா என்றும், சிவலிங்கம் படமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story