கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x

கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

திருச்சி

கே.கே.நகர்:

திருச்சி, கே.கே.நகரை அடுத்த பஞ்சப்பூர்- புதுக்கோட்டை சாலை அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் திருச்சி தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் திருச்சி, கே.கே.நகர் உடையான் பட்டி அருகில் உள்ள ரிவேரா நகரை சேர்ந்த ராகவேந்திரா(வயது 40) என்பதும், இவர் கடந்த 3-ந் தேதி ஈரோடு செல்வதாக அவருடைய மனைவி கவிதாவிடம் கூறிவிட்டு சென்றதும், பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து ஏற்கனவே கவிதா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராகவேந்திரா கிணற்றில் பிணமாக கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story