ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்
ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
கரூர்
குளித்தலை-லாலாபேட்டை ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story