மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சங்கரன்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அசோக் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், மாடசாமி, மணிகண்டன், மாரியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story