மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை ரத்துசெய்யக்கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
மின்கட்டண உயர்வை ரத்துசெய்யக்கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர குழு உறுப்பினர் அருள் பிரகாஷ் ஜெராலட் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, நாகராஜன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story