மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த அலுவலகத்தில் மின்கட்டணம் வசூலிக்கும் கவுண்டரின் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. நகரச் செயலாளர் எல்.பி. ஜோதிபாசு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மோகன்தாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆ.சக்திவேல் முருகன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பி.ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story