மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக கவர்னரை திரும்ப வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வட்டார குழு உறுப்பினர் முருகன், சி.ஐ.டி.யு. ரத்தினவேல், தமிழ்நாடு விவசாய சங்கம் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story