மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

காமநாயக்கன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கயத்தாறு ஒன்றிய குழு சார்பில் காமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் தடையில்லாமல் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மரியஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அந்தோணி ராஜ், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story