வாருகாலில் கொத்தனார் உடல்


வாருகாலில் கொத்தனார் உடல்
x

வாருகாலில் கொத்தனார் உடல் மீட்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா கே.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மருது (வயது 40). கொத்தனார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருது மேலகள்ளங்குளம் காலனி அருகே உள்ள வாருகாலில் இறந்து கிடப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருதுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story