கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x

வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 21 நாட்கள் நடக்கிறது.

வேலூர்

இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நோய்பாதிப்பு

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுதன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் போது 3 மாத குட்டிகளுக்கும் கொடுக்கும்போது இறப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதா இழப்பை தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே கால்நடைகளை தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்த்தல் ஆகிய காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. எனவே வேலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 21-ந் தேதி வரை 21 நாட்கள் முகாம் நடைபெற உள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story