சவுரிராஜபெருமாள் கோவிலில் உதயகருட சேவை


சவுரிராஜபெருமாள் கோவிலில் உதயகருட சேவை
x

சவுரிராஜபெருமாள் கோவிலில் உதயகருட சேவை

நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் உதயகருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உதயகருட சேவை

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.

தீர்த்தவாரி

அதனை தொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story