கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்; தாய்-மகன் கைது


கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்; தாய்-மகன் கைது
x

நிலக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ராணி (வயது 62). இவர் நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இந்தநிலையில் இவர், நிலக்கோட்டை-அணைப்பட்டி சாலையில் திரவியம்நகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து வந்தார். மேலும் அந்த நிலத்தில் கம்பி வேலி போட முயற்சி செய்தார்.

இதுகுறித்து அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ராணியிடம் சென்று அரசு நிலத்தை எப்படி ஆக்கிரமிப்பு செய்யலாம் என்று கேட்டனர். அப்போது அவரும், அவரது மகன் விஜயபாஸ்கரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து, ராணி மற்றும் விஜயபாஸ்கரை கைது செய்தனர்.



Next Story