மகனுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


மகனுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

மகனுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி மேலதேவதானம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி செல்வராணி(வயது 50). இவர்களது மகன் விக்னேஷ்குமார்(30). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஞானவேல் ஏற்கனவே இறந்துவிட்டதால், செல்வராணி தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ்குமாருக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் செல்வராணி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் மாடியில் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு செல்வராணி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்னேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story