மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது
x

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து பல்வேறு புகார்கள் வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது வேட்டவலம் சாலை மற்றும் சின்னக்கடை வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஒருவர் ஓட்டி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிள்களை திருடியது திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் (வயது 25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story