முத்தாரம்மன் ரத வீதி உலா


முத்தாரம்மன் ரத வீதி உலா
x

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபட்டனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story