நாம் தமிழர் கட்சி நிர்வாகி மர்ம சாவு


நாம் தமிழர் கட்சி நிர்வாகி மர்ம சாவு
x

முதுகுளத்தூர் அருேக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர். இவர் அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். வீடு திரும்பாத நிலையில் நேற்று காலை கண்மாய் கரையில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குளிக்க சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதுகுளத்தூர் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைைமயிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story