கோபி அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


கோபி அருகே  எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

கோபி அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியுடன் பிரிந்து வாழ்கிறார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டின் விட்டத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story