கோவில்பட்டி அருகே பெண்ணிடம் கவரிங் நகையைபறித்து சென்ற மர்ம நபர்
கோவில்பட்டி அருகே பெண்ணிடம் கவரிங் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி (மேற்கு):
கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிழக்குத் தெருவை சேர்ந்த முத்துமாைல மனைவி வேல்தாய் (வயது 37). இவர் குருவிநத்தத்திலிருந்து தொட்டம்பட்டிக்கு நேற்று மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர் ஆத்திகிணறு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் வேல் தாயை திடீரென வழிமறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டாராம். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story