தேனி அருகே 11 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு


தேனி அருகே  11 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
x

தேனி அருகே பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி மாணவ, மாணவிகள் 1,150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 500 பேருக்கான பரிசோதனை முடிவில், 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் அந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.


Next Story