தேனி அருகேபெண்ணுக்கு கொலை மிரட்டல்


தேனி அருகேபெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:45 PM GMT)

தேனி அருேக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை ஜோதிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவருக்கும், தேனி அருகே உள்ள தப்புகுண்டை சேர்ந்த சூரிய பிரபா (வயது 25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் சந்துரு என்ற குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதைத்தொடர்ந்து அய்யனார் தனது மனைவியிடம் குழந்தையை கேட்டார். ஆனால் அவர் குழந்தையை கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 10-ந்தேதி தப்புக்குண்டுவில் திருவிழா நடந்தது. அப்போது அங்கு அய்யனார் மற்றும் அவருடன் 9 பேர் வந்தனர். அவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு பிரபாவிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யனார் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story