புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


தினத்தந்தி 27 Dec 2022 6:45 PM GMT (Updated: 27 Dec 2022 6:47 PM GMT)

கங்கைகொண்டான் அருகே புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கங்கைகொண்டான் அருகே புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

புதுமண தம்பதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 27). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தற்போது நெல்லை வண்ணார்பேட்டையில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாரிமுத்துவுக்கும், கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூரைச் சேர்ந்த நம்பி என்பவருடைய மகள் முத்தம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் கணவன்-மனைவி இருவரும் கங்கைகொண்டானில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மாரிமுத்து அங்கிருந்து கட்டுமான வேலைக்கு சென்று வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததுடன் கோவில்களுக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் அவர்களது வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story