சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்


சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 May 2022 11:41 AM GMT (Updated: 19 May 2022 11:50 AM GMT)

சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறைமூலமாக, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனிநபர்கள், தன்னார்வ நிறு வனங்கள், வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து ஆண்டுதோறும் சுற்றுச்சுசூழல் விருது வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள் பெறவிரும்பும் சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான தன்னார்வ நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பத்தினை WWW.environment.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குனர், சுற்றுச்சூழல் துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்ற முகவரிக்கு வருகிற 23-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story