வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 19 May 2022 4:25 PM GMT (Updated: 19 May 2022 5:43 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள நத்தவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 34). சம்பவத்தன்று இவரது உறவினர் சூர்யா (17) என்பவர் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (34) என்பவர் சூர்யாவை பார்த்து கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சூர்யா, கருணாகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராமமூர்த்தியிடம் சென்று தட்டிக்கேட்டனர். அப்போது ராமமூர்த்தி தன்னிடம் இருந்த கத்தியால் கருணாகரன் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கருணாகரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில், ராமமூர்த்தி மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story